Enge Selkindaraai

Enge Selkindaraai Song Lyrics In English


கல்லிருக்கும் முள்ளிருக்கும்
கருநாகப் பாம்பிருக்கும்
தொல்லை தரும் பூமியிலே
தூய மனம் கொண்டவளே

எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்

எங்கே செல்கின்றாய் அப்பா
எங்கே செல்கின்றாய்
எங்கே செல்கின்றாய் அப்பா
எங்கே செல்கின்றாய்

எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்

அழுகின்றாயா அழுது விடு
அலைகின்றாயா அலைந்து விடு
அழுகின்றாயா அழுது விடு
அலைகின்றாயா அலைந்து விடு
மழலை சுமந்த மயிலே உலகில்
மழலை சுமந்த மயிலே உலகில்
கருணையை மட்டும் மறந்து விடு

எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்

வாளும் வலிவும் இருந்தாலும்
உன் மனதினில் உறுதி நிறைந்தாலும்
வாளும் வலிவும் இருந்தாலும்
உன் மனதினில் உறுதி நிறைந்தாலும்
சூழும் வஞ்சக சூழ்ச்சியில் உந்தன்
சூழும் வஞ்சக சூழ்ச்சியில் உந்தன்
தோளும் வாளும் என் செய்யும்


எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்
எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்

கோட்டை இருந்தும் அரசில்லை
கொஞ்சும் கிளியிடம் மொழி இல்லை
பாடல் பிறந்தும் இசை இல்லை
வளர் பாவை உனக்கும் துணை இல்லை

எங்கே செல்கின்றாய் அம்மா
எங்கே செல்கின்றாய்

ஒவ்வொரு இரவும் விடியுமடா
ஒவ்வொடு தடையும் அழியுமடா
உள்ளத் துணிவும் முயற்சியும் கொண்ட
உத்தம வாழ்வும் மலருமடா

கண்ணிலே காண்பதெல்லாம்
கவலைகளாய் வளர்ந்தாலும்
உண்மை மலரும் ஒளி பிறக்கும் கலங்காதே