Engey Aval |
---|
எங்கே அவள்
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
முத்தாடும் மார்பில்
முகம் பார்க்க எண்ணும்
முத்தாடும் மார்பில்
முகம் பார்க்க எண்ணும்
என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற
செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற
தேமாங்கனி என்று நான்
தேடினேன் உன்னை
தேமாங்கனி என்று நான்
தேடினேன் உன்னை
கைவளை ஓசையும் மைவிழி ஆசையும்
காணவும் ஏங்கினேன்
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா