Engeyo Pogum |
---|
ஆராரோ
ஆராரோ ஆராரோ
ஓஓஓஓ
ஓஹோ ஓ
எங்கேயோ
போகும் மேகங்கள்
போலே பயணங்கள்
போவோம் இந்த பூமி
மீதிலே
இனி என்ன
நேரும் வாழ்க்கைக்கு
இங்கே விடை சொல்வார்
யாரோ இரு ஜீவன் ஏங்குதே
வெயிலுக்கு நிழலாக
மழை பெய்தால் குடையாக
யார் வந்து நம்மை சேர்வாரோ
தோள் சாய்ந்து
கொள்ள ஒரு துணை
என்று சொல்ல இந்த
பந்தம் மட்டும் பக்கம்
உள்ளதே
எதிர்பார்ப்பு இல்ல
சிறு ஏமாற்றம் இல்ல
ஒரு பயணம் போனால்
தெய்வம் உள்ளதே
எங்கேயோ
போகும் மேகங்கள்
போலே பயணங்கள்
போவோம் இந்த பூமி
மீதிலே
ஆராரோ
ஆராரோ
உள்ளங்கால்
ரேகை போல ஒட்டியே
வாழும் இந்த உறவுக்கு
ஆயுள் என்னவோ
கல்லுக்குள் சிற்பம்
போல கண்ணுக்குள் தெப்பம்
போல நட்புக்குள் கர்ப்பம்
உள்ளதோ
கடவுள்கள் பூமிக்கு
வருகின்ற ஒரு தேதி
மறக்காமல் கேளுங்கள்
இதை பற்றி ஒரு சேதி
நிலை இல்லா வாழ்வில்
எது நிலையானதென்று
அட யார் தான் இங்கே
நியாயம் சொல்வாரோ
கானல் நீர் போலே
தினம் கலைந்தோடும்
வாழ்வில் வெறும் நட்பை
கொண்டு வாழ்வை வெல்வாரோ
எங்கேயோ
போகும் மேகங்கள்
போலே பயணங்கள்
போவோம் இந்த பூமி
மீதிலே
ஓஓஓஓ
யாரோடு யாரும்
இங்கே துணை போக
நேரும் போது உண்டாகும்
உறவும் இது தானே
எழுதாத விதிகள்
என்று எவர் வந்து சொல்வார்
இன்று இது என்ன நிழலா
நிஜம்தானே
கண்ணீரோ
புன்னகையோ எல்லாமே
சரி பாதி யார் சொல்லி
தந்தாரோ அழகான புது
நீதி
ஒரு கோடி
சொந்தம் அதில் பல
கோடி பந்தம் இவை
எல்லாம் இங்கே
பொய்யாய் போனதே
எது வந்த போதும்
நம் நட்பொன்றே போதும்
என கண்கள் மூடி பயணம்
போகுதே