Engeyo Thikkudesai

Engeyo Thikkudesai Song Lyrics In English






எங்கேயோ திக்கு திசை
காணாத தூரம்தான்
எம்மாடி வந்ததென்ன
என் வாழ்க்கை ஓடம்தான்

காவேரி தீரம் விட்டு
கால்கள் வந்ததடி
காணாத சோகம் எல்லாம்
கண்கள் கண்டதடி


கைமாறி நான் வளர்த்த
பச்சைக்கிளி போனது
கண்ணார நானும் காண
இத்தனை நாள் ஆனது

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே
தந்தையின் பாசம் வென்றதடி
பசும் பொன்னே செவ்வந்திப் பூவே
இத்துடன் சோகம் சென்றதடி

நான் கங்கா நதியை
காணும் பொழுது
உண்மை விளங்குது
அட இங்கே குளிக்கும்
மனிதன் அழுக்கில்
கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவக்கறையை
நீரில் கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி
நானும் அழுவது