Enna Kurai |
---|
என்ன குறை நான் வைத்தேன் கண்ணே என்ன நினைத்து வளர்த்தேன் உன்னை கண்ட கனவும் வீணாய் போகுமா
என்ன பிழை நான் செய்தேன் கண்ணே என்னைப் பிழிந்தே எடுத்தேன் உன்னை கண்ட கனவும் வீணாய் போகுமா தங்க வளையல் தாம்பாய் மாறுமா தொட்டில் குழந்தை தூக்கில் ஆடுமா
தன்னை தந்தே வாழும் உன்னை போலே யாரும் கனாவிலும் கண்டேன் இல்லையே கடல் தூங்கும் ஆழம் நெடும் வானின் நீளம் எல்லாம் சேர்ந்தும் கொஞ்சமே
விழி நீரை சிந்த கூடாதே அதை வீடு என்றும் தாங்காதே இந்த தீயை ஆற்றுவேன் நீரை ஊற்றுவேன் பாதை மாற்றுவேன்