Enna Pathti Nee

Enna Pathti Nee Song Lyrics In English


என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
ஆத்து நீரில் குளிக்கும்போதும்
அயிர மீனு கடிக்கும்போதும்
தேடி வந்து சிரிக்கும்போதும்
தென்னந்தோப்பில் ஒளியும்போதும்
என்னப் பத்தி நீ ஏய்என்ன நினைக்கிறே

உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே
ஹோய் உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே
கண்ணு ரெண்டும் துடிக்கும் வரைக்கும்
கன்னம் கொஞ்சம் சிவக்கும் வரைக்கும்
தூக்கம் கெட்டு துடிக்கும் வரைக்கும்
இந்த மேனி இளைக்கும் வரைக்கும்
உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கலே

இரவு முழுதும் விழிச்சு உனக்கு
கடிதம் எழுத நெனச்சேன்
விடிஞ்சபோது எழுத வந்ததில்
பாதி தானே முடிச்சேன்

முந்தா நேத்து சாயங்காலம்
முல்லைப் பூவை தொடுத்தேன்
முந்தா நேத்து சாயங்காலம்
முல்லைப் பூவை தொடுத்தேன்
உன்ன பாத்த அவரசத்தில்
நாரத்தானே முடிஞ்சேன்

என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே


பேச நெனைக்கும் வார்த்தை உனது
வாசல் வந்தால் திக்கும்
புரட்டுகின்றேன் புத்தகத்தில்
நகரவில்லை பக்கம்

ரெண்டு வார்த்தை பேச வேண்டும்
ரொம்ப நாளா ஆவல்
ரெண்டு வார்த்தை பேச வேண்டும்
ரொம்ப நாளா ஆவல்
விடிய மறுக்கும் ராத்திரிக்கு சேவல் கூட காவல்

என்னப் பத்தி நீ என்ன நினைக்கிறே
உன்னப் பத்தி நான் ஒண்ணும் நெனைக்கல
அஹஹாஹ் லாலாலலா
லலலல லாலாலலலலலாலா