Ennai Paadavaithavan

Ennai Paadavaithavan Song Lyrics In English




என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சோலையில் மலராய் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
அவன் சோலையில் மலராய் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய் திரிவான்
குளிர் ஓடையில் அலையாய் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான் விரிவான்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்


அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல் வள்ளல்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்த கோமகன் திருமுகம் வாழி வாழி

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்