Ethanaiyo Athamavan

Ethanaiyo Athamavan Song Lyrics In English


ஹேய்ஹேய்ஹேய்ஹேய்ஹேய்
எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்

பள்ளிக்கூட பையன்களும்
பல்லுப் போன பாட்டன்களும்
ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்

ஆளாகித்தான் நாளாச்சுது
பூமேனிதான் நூலாச்சுது

எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்

அஞ்சு வித பூவெடுத்து அம்பு விட மம்முதனும்
செங்கரும்பு வில்லப் புடிச்சான் அடிச்சான்
அந்த அடி தாங்கவில்ல அம்மம்மா நான் தூங்கவில்ல
ஆக மொத்தம் ரொம்ப தவிச்சேன் துடிச்சேன்

உன்னப் போல ஆளத் தேடி உள்ளம் வாடுது எதுக்கு
வண்ணப்பூவும் வாசம் வீசி வண்ட தேடுது அதுக்கு

எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்


நட்டநடு ராத்திரிதான் நானுமொரு மாதிரிதான்
உச்சி முதல் பாதம் வரைக்கும் கொதிக்கும்
முன்னழகும் பின்னழகும் மூடி வச்ச பெண்ணழகும்
சந்தையில வந்த சரக்கு உனக்கு

மீச வச்ச ஆண்களெல்லாம் ஆச வைக்கலாம் வரலாம்
ஆச வச்ச பின்னால் கூட காச வைக்கலாம் தரலாம்

எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்

பள்ளிக்கூட பையன்களும்
பல்லுப் போன பாட்டன்களும்
ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்
ஆளாகித்தான் நாளாச்சுது
பூமேனிதான் நூலாச்சுது

எத்தனையோ அத்தமவன்
எத்தனையோ மாமன் மவன்
யாருக்குன்னு மாலைப் போடுவேன்

பள்ளிக்கூட பையன்களும்
பல்லுப் போன பாட்டன்களும்
ஆசப்பட்டா என்ன பண்ணுவேன்