Ezhuthatha Sattangal Solgindra |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே
எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே
மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில் தருமம் கூண்டிலே சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான் வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான்
எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே
செய்யாத குற்றம் என்றாலும் சட்டம் தண்டிக்க அஞ்சாதது பொய்யான சாட்சி கண்கண்ட சாட்சி ஆராய்ந்து பார்க்காதது கண்ணீரா தீயானது தாய் பாலா நோயானது சொல் சொல் சொல்
சாத்தானின் வேதம் இது சதிகாரர் வாதம் இது ஏன் ஏன் ஏன் அநியாயம் சபையேறும் ஒரு நாளில் வெளியேறும் அட போ போ
எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே
பாசங்கள் எல்லாம் பாவங்களா சட்டத்தின் சாபங்களா நீதிக்கு என்றும் கண் இல்லையா நியாயங்கள் இங்கில்லையா
தந்தை பிள்ளை போரிலே தாயின் கண்கள் நீரிலே உள்ளம் ஒன்றே உள்ளது யாருக்கும் என்றே சொல்லாது தாயாகி வந்து நோயாகி நின்று கண்ணீரில் சேயாகிறாள்
எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே
மனிதா உன் சட்டங்கள் பொய்யான நேரத்தில் தருமம் கூண்டிலே சாட்சி அவன்தான் வக்கீல் அவன்தான் வாதம் செய்யுவான் நியாயம் சொல்லுவான்
எழுதாத சட்டங்கள் சொல்கின்ற தீர்ப்பென்ன இறைவன் கோர்ட்டிலே