Idhaya Mazhaiyil |
---|
ஆண் மற்றும்
இதய மழையில்
நனைந்த கிளிகள்
புதிய நதியில்
குளித்து குளித்து எழவேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்
காதல் வரச் சொல்ல
கால்கள் தடை சொல்ல
மௌனம் பிறக்கிறது
காவலோ வேலியோ
யாரைத் தடுக்கிறது
ஏதோ புரியுது ஏதோ தெரியுது
இன்பம் எழுகிறது
ஏக்கமோ தூக்கமோ
கண்கள் தவிக்கிறது
மலர்ந்த நேரமே
மயங்கத் தோன்றுமோ
உணர்ந்த பின்னரே
உறங்கத் தோன்றுமோ
இதய மழையில்
நனைந்த கிளிகள்
புதிய நதியில்
குளித்து குளித்து எழவேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்
மாறன் அரண்மனை
மாடம் இரண்டிலும்
தீபம் எரிவதென்ன
மாலையோ காலையோ
மயக்கம் வருவதென்ன
வாசல் பளிங்குகள்
ஆசை வெளிச்சத்தில்
கோலம் இடுவதென்ன
வாடையோ தென்றலோ
வசந்தம் வருவதென்ன
கனிந்த உள்ளமே
இணைந்து கொண்டது
இருந்த நாணமே
மறைந்து நின்றது
இதய மழையில்
நனைந்த கிளிகள்
புதிய நதியில்
குளித்து குளித்து எழவேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்