Inbam Yavume |
---|
இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
இன்பம் யாவுமேஏ
துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும்
அன்றே வாடிடுமேஏ
பண்புடன் பழகும் பலநாள் கிளியும்
பறந்தே ஓடிடுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
சோதனையாலே தென்றலும் ஒருநாள்
புயலாய் சீறிடுமேஏ புயலாய் சீறிடுமே
காதலர் வாழ்வும் எதிர்பாராமல்
கனவாய் மாறிடுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
கனவில் தோன்றிடும் காசும் பணமும்
கைதனில் கிடைத்திடுமா
கலை வான் நிலவை
நாம் கவர்ந்திட நினைக்கும்
காரியம் முடிந்திடுமா
எண்ணம் போலவே எதுவும் நடந்தால்
இறைவன் இல்லையடாஆஅஆ
எண்ணம் போலவே எதுவும் நடந்தால்
இறைவன் இல்லையடா
இகமீதில் நீ இருக்கும் வரைதான்
இத்தனை தொல்லையடா
இத்தனை தொல்லையடா
இகமீதில் நீ இருக்கும் வரைதான்
இத்தனை தொல்லையடா
இன்பம் யாவுமேஏ
துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே