Inbathil Malarntha |
---|
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா
நெஞ்சத்தில் கனிந்த எண்ணங்கள்
எண்ணத்தில் கலந்த வண்ணங்கள்
தித்திக்கும் மணக்கும் உருவமிது
அணைத்திடும் மனம் குளிர குளிர
அருகினில் வா வா வா
உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும்
உறைவைத்தான் பால் மனம் சொல்லும் ஹா
உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும்
உறைவைத்தான் பால் மனம் சொல்லும்
உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும்
உறைவைத்தான் பால் மனம் சொல்லும்
கண்ணைத்தான் மயக்கும் கனவைதான் வளர்க்கும்
சொல்லத்தான் இனிக்கும்
சுவையைத்தான் கொடுக்கும்
முத்துக்கள் விரித்து கொடி தழுவ
முத்துக்கள் பறித்து கனிவு பெற வா வா வா
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா
கொஞ்சிப் பார் கைகள் கொஞ்சம்
எண்ணிப் பார் யாவையும் தங்கம்
என்னில் நீ இருக்க உன்னில் நான் சிரிக்க
கண்ணில் நான் கலக்க கட்டில் தான் இருக்க
மஞ்சத்தை விரித்து கலை பயில
மதுரத்தை கொடுத்து சிலை எழுத வா வா வா
இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள்
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது
இணைந்திட சுகம் வளர வளர
மடியினில் வா வா வா