Indirajaala Vidhdhaikkaaran |
---|
இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
இன்பமுடன் துன்பம் மாறி மாறிக் காட்டுவான்
இருளும் ஒளியும் சுழலும்
வெட்ட வெளியை காட்டுவான்
அன்புருவாய் அன்பர் மனம் தன்னிலாடுவான்
அன்பர் துன்பம் கண்டு பொறாரங்கவிடோபா
ஸ்ரீரங்கவிடோபா அவன்
இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
நல்லவர் போல் நம்மை சுற்றும் கொடியவர் உண்டு
நல்லவர் பலர் பகைவர் போல காண்பதும் உண்டு
எல்லாம் அரங்கன் அருள் விலாஸ நாடக மேடை
எதிலும் மயங்காதவர்க்கு
பேரின்ப வீடே அருளும்
இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
ஏழைகளே ஏழைகளின் துன்பம் உணர்வார்
இறுமாப்புடன் பொருளுடையோர்
கண் உள்ள குருடர்
ஏழைகளே ஊழியர் தம் துன்பம் உணரார்
கோபுரத்தை பொம்மை தாங்கும்
நினைவுனக்கேனோ அந்த
இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்