Iniya Malargal |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்
வசந்தம் வந்த போதும் வேனில் வந்த போதும்
என்றும் என்றும் கேட்கும் அன்பெனும் ராகமே
இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்
அள்ளி அள்ளி செல்லச் செல்ல
அன்பு குறையாது
அன்னை தந்தை பாசம் இங்கே
சொல்லி முடியாது
சொந்த பந்தம் வந்து நிற்க
வரவு சொல்லும் வாசல்
பிரிந்திருக்கும் சேர்வதில்லை
இந்த வீட்டு வாசல்
கற்பனையில் கூட இது போல்
காண முடியுமா
ஏட்டில் கூட எழுத்தில் கூட எழுத முடியுமா
மண்ணில் ஒரு சொர்கம் என்று
சொன்னால் அது பொய் இல்லையே
என்றும் இது பூந்தோட்டமே ஹோ
இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்
அற்புதங்கள் ஆடி வரும்
அன்னை மடி வீடு
சித்திரங்கள் பேச வரும் செல்லக்
கிளிக் கூடு
நித்தம் ஒரு புத்தம் புது கோலங்களைப் போடும்
முற்றம் அதில் முத்துச் சுடர் ஆடும் இசை பாடும்
ஊருக்கென்று அன்பைச் சொல்லும்
இந்த வீடு தான்
உறவு இந்த உலகம் என்று சொல்லும் வீடு தான்
மண்ணில் ஒரு சொர்கம் என்று
சொன்னால் அது பொய் இல்லையே
என்றும் இது பூந்தோட்டமே ஹோ
இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்
வசந்தம் வந்த போதும் வேனில் வந்த போதும்
என்றும் என்றும் கேட்கும் அன்பெனும் ராகமே
இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்