Iniyavale

Iniyavale Song Lyrics In English


ஓஹோஊஏஆ

ஆஹா ஆஹா
ஏஹேஹேஹே ஆஹாஹா

ஓஹோஓஹோஹோ ஹோ

ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
இனியவளே என்று பாடி வந்தேன்

ம்ம்ம்ம்ம்ஆஹா ஹா ஹா ஹா

இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

ஆஹா ஹா ஹா ஹா
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்

ஓராயிரம் காலம்
இந்த உள்ளம் ஒன்றாக

ஒன்றானவர் வாழ்வே
இன்ப வெள்ளம் என்றாக

துணை தேடி வரும் போது
கண்ணில் என்ன நாணமோ

குணம் நாட்டில் உருவான
பெண்மை என்ன கூறுமோ

திருநாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்
திருநாள் வரும் அதோ பார்
தருவார் சுகம் இதோ பார்

பொன் மாலையில்

பூமாலையை

நெஞ்சில் சூடவோ

சூடவோ

சூடவோ


இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்

தாலாட்டிடும் நெஞ்சம்
தன்னைத் தங்கம் என்றானோ

பாராட்டிடும் இன்பம்
தன்னை மங்கை கண்டாளோ

நினைத்தாலும் சுகம் தானே
இந்த நெஞ்சின் காவியம்

கொடுத்தாலும் நலம் தானே
என்னைக் கொஞ்சும் ஓவியம்

இதழால் உடல் அளந்தாள்

இவளோ தன்னை மறந்தாள்

இதழால் உடல் அளந்தாள்

இவளோ தன்னை மறந்தாள்

ஏனென்பதை

யார் சொல்வது

இன்னும் மௌனமேன்

மௌனமேன்

மௌனமேன்

இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

ஆலாலாலலா ஓஹோஹஓஹோ
ஓஹ்ஹோ ஓஹ்ஹோஓஹ்ஹோ ஓஹ்ஹோ