Innisai Padi Varum Climax

Innisai Padi Varum Climax Song Lyrics In English


இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம்
வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை
தேடித் தேடி தேடும் மனது
தொலைகிறதே

இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை

இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை



கண் கொண்டு
தன் கண்ணை கண்டவர்கள்
கிடையாது என் கண்ணை
காணுகிறேன் இமை ரெண்டும்
அசையாது


குயில் இசை
கேட்டவள் இன்று குயில்
முகம் பார்க்கிறாள் உயிர்
தொட்ட பாடலின் முழு
உருவத்தை பார்க்கிறாள்

தேடும் முன்பே
வந்த பொருள் வாழ்வில்
நிலைப்பதில்லை தேடி
தேடி கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லை

இசை பாட்டும்
காற்றும் சேர்ந்த பின்பு
பிரிவதில்லை

இன்னிசை பாடகரே
இவள் விண்ணுயிர் கலந்து
விட்டால் மண்ணகம் உள்ள
வரை இவள் மனசுக்குள்
வாழ்ந்திருப்பாள்

இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை