Iravil Varugira (Female Version)

Iravil Varugira (Female Version) Song Lyrics In English


இரவில் வருகிற
திருடன் போலவே இதயம்
நுழைந்ததே காதல் மனம்
களவு போனதால் காலியாகி
போனேன்

தோற்றாலுமே
பரவாயில்லை காதல்
செய்ய வேண்டும் அது
தோன்றாமலே உறவே
இல்லை தானாய் வந்து
தீண்டும்

காதல் செய்தால்
தப்பே என்றாலும் ம்ம்ம்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே

இரவில் வருகிற
திருடன் போலவே இதயம்
நுழைந்ததே காதல் மனம்
களவு போனதால் காலியாகி
போனேன்

ஹ்ம்ம் கண்ணை
மூடி கண்ணை திறந்தேன்
அட கடவுள் போல நேரில்
தெரிந்தாய்

ஹே கண்ணை
மூடி கண்ணை திறந்தேன்
அட கடவுள் போல நேரில்
தெரிந்தாய்

ஏனோ நானும்
என்னை மறந்து ஏதோ
ஆனேனே ஏகாந்தமாய்
எல்லை கடந்து எங்கோ
போனேனே

வெட்டி
முறிக்கும் வேலையாக
காதல் செய்கிறேன் திட்டி
தீர்க்க திரும்பி பார்த்தால்
திருப்தி ஆகிறேன்

தட்டி கழிக்க
மட்டும் என்னை
நினைத்திடாதடா தப்பி
செல்ல வழியே இல்லை
தவிக்கிறேனடா ஆ


காதல் செய்தால்
தப்பே என்றாலும்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே

ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஆஆ ஆஆ ஆ
ஆஆ

நாசுக்காக
என்னை கவர்ந்தாய்
அபிநயமாகத்தான்
நெஞ்சில் நிறைந்தாய்

ஹே நாசுக்காக
என்னை கவர்ந்தாய்
அபிநயமாகத்தான்
நெஞ்சில் நிறைந்தாய்

என்மனம் என்பது
எங்கே உள்ளது எனக்கே
தெரியவில்லை அதில்
எப்படி வந்து நீ தான்
நுழைந்தாய் என்பது
புரியவில்லை

தட்டு கெட்ட
தட்ப வெப்ப நிலையில்
வாழ்கிறேன் நுட்பமான
நோயில் விழுந்து தினமும்
சாகிறேன்

செத்து பிழைக்கும்
கலையை காதல் கற்று
தந்ததே சித்ரவதைக்குள்
என்னை கொண்டு சிக்க
வைத்ததே

காதல் செய்தால்
தப்பே என்றாலும் ம்ம்ம்
அந்த தப்பை செய்தால்
தப்பே இல்லையே அதில்
தப்பித்தவர் யாரும்
இல்லையே