Kaadhal Nilave Kanmani Radha Sad |
---|
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு
கனவிலும் நானே
மறுபடி வருவேன்
கவலை இல்லாமல் தூங்கு
நாளும் தூக்கமில்லாமல்
ஓடும் நதியினைப் போலே
உன்னைக் காத்திருக்க எண்ணமிட்டேன்
ஆசையினாலே
காதல் பாட்டுப் பாடினேன்
தாலாட்டுப் பாடினேன்
என் கண் கலங்கச் செய்து விட்டு
நீயும் ஓடிவிட்டாயே
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு
என்னைத் தேற்றுவாரில்லை
துன்பம் மாற்றுவாரில்லை
உன்னை சேர்ந்து விட்ட நெஞ்சம் இன்னும்
மாறவேயில்லை
என்னைத் தேற்றுவாரில்லை
துன்பம் மாற்றுவாரில்லை
உன்னை சேர்ந்து விட்ட நெஞ்சம் இன்னும்
மாறவேயில்லை
எந்தத் தடையிருந்தாலும்
வாழ்வில் தனித்திருந்தாலும்
அன்று கலந்து விட்ட நமது
உள்ளம் பிரிவதும் இல்லை
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு
கனவிலும் நானே
மறுபடி வருவேன்
கவலை இல்லாமல் தூங்கு
காதல் நிலவே
கண்மணி ராதா
நிம்மதியாகத் தூங்கு
நிம்மதியாகத் தூங்கு
நிம்மதியாகத் தூங்கு