Kaadhoram

Kaadhoram Song Lyrics In English


இசை அமைப்பாளர் : விஷால் சந்திர சேகர்

காதோரம்
மூச்சு காற்று ஒன்று ரீங்காரம்
செய்யுதே
கண்ணோரம்
சொப்பனங்கள் சிந்தி பூங்காற்றில்
சேருதே

அலாதியான தோற்றம்
அம் மூக்கின் மேலே சீற்றம்
விநோதமாக என்னை மாற்றுதே

ஆகாதே
கண்ணை கொள்ளை கொண்டு போகாதே
முன்பிலே
தாங்காதே
உன்னை பார்க்க வேணும் வேண்டாமா
கண்களே

மீறாத எல்லை மீறி
கூரான சொல்லை கூறி
நீராக உன்னை சேர பார்கிறேன்

புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்

நீ தேடவேண்டும் தொலைந்து போகவா
உன் கண்ணின் ஓரம் கணவாகவா
நீ கூறும் வண்ணம் பெண்ணாக மாறவா
மாற்றத்தில் ஒன்றை மடி சேரவா


கண்ணாடி முன் நின்று நின்று
என்னை கூர்ந்து பார்கின்றேன்
நான் இல்லையே
என்னாச்சுடா என்று என்னை கேள்வி கேட்கிறேன்
வெட்கப்பட்டு வேர்க்கிறேன்

புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்

வெண்மேகம் ஒன்று விதானம் மாறுது
வானத்தை விட்டு தரை சேருது
நீரூற்று ஒன்று நிதானம் ஆகுது
தோள் மீது சாய்ந்து அணை போடுது

எங்கே எந்தன் வானவில்லை காணவில்லை
என்றேங்கி வான் தேடுது
நீ இங்குதான் உள்ள சேதி கண்டுகொண்டாடுது
விட்டு விட்டு சென்றது

புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்

Tags