Kaana Karunkuyil

Kaana Karunkuyil Song Lyrics In English


கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா
முத்துப்போலே மெட்டுப்பாட
முத்துமால கட்டிப்போட
வந்தேனேஏ

கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா

தேனும் பாலும்
வேம்பாப் போச்சு
உன்னைப் பாத்த நாளு
தூர நின்னேன்
நீதான் என்னை
தூண்டில் போட்ட ஆளு

மாடி வீட்டு மானா
கூரை வீட்டில் வாழும்
வீடு வாசல் யாவும்
நீதான் எந்த நாளும்

மானங்காக்கும்
சேலை போலேஹே
மாமன் வந்து
கூடும் நாளே
வெட்கம் ஏறும் மேலே

கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா
முத்துப்போலே மெட்டுப்பாட
முத்துமால கட்டிப்போட
வந்தேனேஏ

கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா


சோளக் கதிரு ஒண்ணு
சோளக்கட்டி ஆடும்
நீலக்குருவி வந்து மால
கட்டிப் போடும்

மாமன் மனசுக்குள்ளே
மொட்டு விட்டேன் நான்தான்
வாழ வயசுப்புள்ள
வார்த்தையெல்லாம் தேன்தான்

பாசம் பந்தம் எங்கே போகும்
போனால் தீயாய் தேகம் வேகும்
தீராதம்மா மோகம்

கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா
முத்துப்போலே மெட்டுப்பாட
முத்துமால கட்டிப்போட வந்தேனே

கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா