Kadavul Ezhuthum |
---|
கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே
உன்னாலே
தூக்கங்கள் தூள்
தூளாய் போனதே
வேருக்குள் நீரைப்போல்
நம் காதல் ஏறுதே
கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே
காலை எல்லாமே
உன் அருகே எழாதோ
மாலை எல்லாமே உன்
மடியில் விழாதோ
உனக்கும் எனக்கும்
இருக்கும் நெருக்கம் இறுதி
வரைக்கும் இருக்கும் இரவும்
பகலும் உறங்கும்பொழுதும்
இமைகள் உன்னை அழைக்கும்
கடவுள் எழுதும்
கவிதை நீயே என் இதயம்
முழுதும் நிறைந்து
விட்டாயே
காயம் எல்லாமே
உள்ளாறும் உன்னாலே
நீயும் இல்லாமல் உயிர்
நீங்கும் தன்னாலே
மெதுவாய் மனதை
திறந்தாய் எனக்குள் கரைந்தாய்
உயிரில் கலந்தாய் உறவாய்
எனக்கு கிடைத்தாய் பிரிய
மறுத்தாய் நீ எந்தன்
மறு தாய்