Kadavule Kadavule

Kadavule Kadavule Song Lyrics In English


கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

அர்ச்சனைப்பூக்கள்
எல்லாம் உன் முகம் மேல்
தூவ பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன்
செவி நுழைய யார் வந்து
அடித்தாலும் ஜோராய்
தலை ஆட்டும்

நான் இன்று
காண்பதெல்லாம் பொய்
இல்லை மெய் தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே



கண்ணை பார்த்ததும்
வேகமாய் மின்னல் அடித்தது
நெஞ்சிலே தோளில் சிறகுகள்
இன்றியே தேகம் பறக்குது
விண்ணிலே

இந்த புது உயிரே நீ
தந்ததாய் என் புலன் ஐந்தும்
நன்றி சொல்லுதே ஓர் எருதாய்
எருதாய் அலைந்து வந்தேன்
உன் இமையின் அழைப்பால்
கரையில் வந்தேன் உன் விரலில்
என் மனசும் மோதிரமாகியதே

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே






ஓ ஹோ ஹோ
மண்ணை முதல் முறை
பார்த்திட தாயின் கருவறை
சொன்னது என்னை முதல்
முறை பார்த்திட உந்தன் கரு
விழி சொன்னது

மலை உயரத்திலே
நதி தோன்றுமே அது சேரும்
இடம் கடல் ஆகுமே இது
உயிரும் உயிரும் பேசும்
மொழி இதை விடவும் சிறந்தது
எந்த மொழி என் உயிரை உன்
பாதத்தில் காணிக்கை
ஆக்குகிறேன்

கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

அர்ச்சனைப்பூக்கள்
எல்லாம் உன் முகம் மேல்
தூவ பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன்
செவி நுழைய யார் வந்து
அடித்தாலும் ஜோராய்
தலை ஆட்டும்

நான் இன்று
காண்பதெல்லாம் பொய்
இல்லை மெய் தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா