Kainiraiya Chozhi |
|---|
இசை அமைப்பாளர் : வி குமார்
கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் மாமி
கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் மாமி
காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் விழிக்கும் நாழி
தவமிருந்து நானே
தாயம் ஒன்று போட்டேன்
வெட்டுப் பட நானும்
விட்டு விட மாட்டேன்
விட்டு விட மாட்டேன்
அங்கிருக்கும் மங்கை
சொந்தமுள்ள ராணி
இங்கிருக்கும் கன்னி
சொக்கத்தான் ராணி
கலக்கமென்ன தோழி
கண் விழிக்கும் நாழி
விதி என்று விளையாட்டை
நினைப்பதும் ஏனோ
சந்தேகம்தானோ
பன்னிரெண்டு போட்டாலும்
கன்னிரெண்டும் அங்கே
மன்னவனும் ஆட்டத்திலே
மாட்டிக் கொண்டான் இங்கே
ஒன்னு விழும் இடத்தினிலே
ரெண்டு விழலாமோ
ஒன்னு விழும் இடத்தினிலே
ரெண்டு விழலாமோ
பந்தயத்தை வாழ்க்கை என்று
எண்ணி விடலாமோ
கலக்கமென்ன தோழி
கண் விழிக்கும் நாழி
காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் விழிக்கும் நாழி
நாணமென்றும் அச்சமென்றும்
நாளு கட்டம் பெண்மைக்குண்டு
நான் ஆடும் ஆட்டமெல்லாம்
ஆட வேண்டும் அதற்குள் நின்று
தாண்டி வர மாட்டாலம்மா
தோழியவள் எல்லை
தாண்டி வர மாட்டாலம்மா
தோழியவள் எல்லை
மங்கையவள் நாலு குணம்
மறந்தவள் இல்லை
கை நிறைய சோழி
கொண்டு வந்தேன் தோழி
காயை வெட்டலாமா
கண் விழிக்கும் நாழி
கண் விழிக்கும் நாழி
