Kalaimaadhum Alaimaadhum |
---|
கலைமாதும் அலைமாதும் இருபுறமும்
அமர்ந்து தொழக் கடைக்கண் நோக்கும்
உலகீன்ற உனது இள நகைமுகம் கண்டுஅஆஅஆ
கடைக்கண் நோக்கும் உலகீன்ற
உனது இள நகைமுகம் கண்டு
உள்ளம் ஆனந்த வெள்ளம் அலைமோத
தொட்டிலிட்டுத் தாலாட்டி
உன் மழலை அமுதம் உண்ட
மலைராஜன் செய்த மாதவம்
புகழும் தரமோ மூவுலக மாதா
இன்பம் கொடுப்பவள் நீ
இன்பம் கொடுப்பவள் நீ
நம்பினோர் துன்பம் துடைப்பவள் நீ
அம்பா
இன்பம் கொடுப்பவள் நீ
நம்பினோர் துன்பம் துடைப்பவள் நீ
உன் பாரம் உன் அடியாள்
உன் பாரம் உன் அடியாள் அம்பா
உன் பாரம் உன் அடியாள்
பேதை எனக்கு
உன் பாதம் துணை யறிவாய்
இன்பம் கொடுப்பவள் நீ