Kan Kanda Deivame |
---|
கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
என்னென்ன சொல்கின்றார்
என்னென்ன செய்கின்றார்
சில உள்ளத்துக்குள் பள்ளம்
வைத்ததுன் வேலையா
வேலையா இது உன் வேலயா
கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
சுந்தர வேல் முருகா
துண்டுகள் இரண்டாக
சூரனை கிழித்தாயன்றோ
ஒரு தோகையை காலடியில்
சேவலை கை அணைவில்
காவலில் வைத்தாயன்றோ
மந்திர தெய்வங்களின்
மாய கதைகளுக்கு
வரை முறை கிடையாதென்றார்
அவை தந்திரம் செய்வதுண்டு
சாகசம் கொள்வதுண்டு
சகலமும் நன்றேயன்றோ
என்னென்ன சொல்கின்றார்
என்னென்ன செய்கின்றார்
சில உள்ளத்துக்குள் பள்ளம்
வைத்ததுன் வேலையா
வேலையா இது உன் வேலயா
கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
காட்சியை கொன்றவர் முன்
சாட்சியை கொன்று விட்டு
ஆட்சியும் செய்தாய்யா
உந்தன் மாட்சிமை என்னவென்று
சாட்சிக்கும் தோன்றவில்லை
சூட்சியை சொல்வாய் அய்யா
பிள்ளையை கொன்று விட்டு
பெரிய விருந்து வைத்தான்
கள்ளமில் பரஞ்ஜோதியேஏ
விருந்து எல்லாம் முடிந்த பின்னே
பிள்ளையினை அழைத்தான்
இறைவன் அருள் ஜோதியே
காரிருள் சூழ்ந்தது
கதிரவன் மறைந்தது
நீதி எல்லாம் துடிக்கும்
மேற்கினில் சூரியன் மறைந்தாலும்
கீழ் வானம் சிவக்கும்
கந்தன் இருப்பது
உண்மை என்றால் சில
உண்மைகள் வெளியாகும்
காலம் வரும் வரை
காத்திருந்தால்
அது நல்லவர் வழியாகும்
இருவர் : கண் கண்ட தெய்வமே
கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா