Kanavula Usura |
---|
கனவுல உசுர கனவுல உசுர
தொலவுற பேதை நான்தான்
நெனவுல அழுக நெருப்புல மெழுக
வீசிட்டு போனேன் நான்தான்
நரிகள் துரத்த வழியில் துடிக்க
தூரத்தில் தொலைச்சேன் உன்ன
நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த
காட்டுது காலம் முன்ன
இந்த வானம் உன்னை காட்டுமா
என் வார்த்தை அங்கு கேட்குமா
இது இன்று நாளை மாறுமா
இல்லை இன்னும் இன்னும் நீளுமா
கடவுள பாக்கனும்
பதிலென்ன கேட்கனும்
வலிய நான் வாங்கனும்
எனக்கு நீ வாழனும்
ஆஆஆஆஆஆஆஆ
உசுருல கனவ உசுருல கனவ
வெதச்சிட்டு இருந்தேன் நான்தான்
அழுகைய நிழலா அழுகைய நிழலா
படைச்சுட்டு போன நீதான்
கருவுல கலச்ச கொழந்தைய போல
தனியா துடிக்கிறேன் உள்ள
முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும்
உலகத்த புரியவே இல்லா
கரை எந்தன் மீது பூசுதே
சிறைக்குள்ளே என்னை வீசுதே
பல கண்கள் பார்க்க கூசுதே
ஏதேதோ சொல்லி ஏசுதே
கடவுள பாக்கனும்
பதிலென்ன கேட்கனும்
எதுக்கு நான் சாகனும்
எதிர்த்துதான் போகணும்
ஆஆஆஆஆஆஆஆ