Kandukondain

Kandukondain Song Lyrics In English


கண்டு கொண்டேன்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில்
இங்கே கண்டு கொண்டேன் முருகா

கண்டுகொண்டேன் நான்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில் இங்கே
கண்டு கொண்டேன் முருகா

விழுந்த இடத்தில் மருதமரம்
விழித்த முகத்தில் கந்தர் முகம்
நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு
கிடைத்த முருகனின் அன்பு வரம்

கண்டு கொண்டேன்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்

இடையோடு கூடும் உடை கோவணங்கள்
எவையும் இல்லை ஐயா
ஒரு சூடமேனும் தருவார்கள்
கூட இங்கில்லை ஐயா
தனியாக நிற்கும் முருகா உனக்கு
இனி நானுண்டு ஐயா இனி நானுண்டு ஐயா

ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
வலிமையுண்டு பொறுமையுண்டு
உழைப்பதென்று நினைப்பதுண்டு
உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு
முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு


உருகுதே கண்கள் உருகுதே
பெருகுதே வெள்ளம் பெருகுதே
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
உனது கோயில் மலரும் முருகா
உருகுதே கண்கள் உருகுதே
பெருகுதே வெள்ளம் பெருகுதே
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
உனது கோயில் மலரும்முருகா
நான் சொன்னது உண்மையடா

படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்
படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்

கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்
தந்தாய் கோடி திருமுருகா
சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்
கண்டதும் போதும் வடிவழகா
கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்
தந்தாய் கோடி திருமுருகா
சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்
கண்டதும் போதும் வடிவழகா

அடியவர்க்கு ஒரு விருந்தே
பிணி பல தீர்க்கும் அருமருந்தே
மனதில் இருக்கும் குரு முருகா
மருதமரத்து வேல் முருகா
வேல் முருகாவேல் முருகா