Kandum Kanamal

Kandum Kanamal Song Lyrics In English


கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்

கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

நினைவுகள் போல
மறதியும் வேண்டும் நேற்றும்
நீங்க நாளை வேண்டும்

தனிமைகள் தீர
துணையும் வேண்டும்
தாங்கும் தோளில்
சாய்ந்திட வேண்டும்

அருகிலே வந்த
போதிலும் ஏனோ தூரமே
நினைவினிலே தேங்கும்
ஞாபகம் நீங்குமோ எந்த நாளுமே

சேருவோம்
சேருவோம் வாழ்வில்

கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

ஆஹா ஆஆ
ஆஹா ஆ ஆ


உறவுகள் நீங்கி
வாழும் வாழ்வில் ஏங்கும்
நொடிகள் சுமையென தெரியும்

திரைகடல் ஓடி
தேடும் தேடல் தீரும்
போது தொலைந்தது தெரியும்

சிறகுகள் வாங்கும்
ஆசையில் வானை நீங்கினோம்
விடைகளை தேடும் ஆவலில்
கேள்வி போல் நாளும் தேங்கினோம்

மாறுதல்
ஆறுதல் ஆகுமே

கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

வந்து போவது
ஏன் தந்து கேட்பது ஏன்

கண்டும் காணாமல்
விழி காண்பது ஏன் கேட்டும்
கேளாமல் செவி சாய்ப்பது ஏன்