Kangal Kalangida |
---|
கண்கள் கலங்கிட
கண்கள் கலங்கிட கால
சக்கரம் திரும்பிடுதே கைகள்
கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர்
பெறுதே
மரத்திலிருந்து உதிர்ந்த
பூக்கள் மீண்டும் கிளைக்கு
சென்றிடுதே கடந்த காலத்தை
திருப்பி தந்து கடவுளை நட்பு
வென்றிடுதே
ஒன்றாய் சிரித்து
அழுத இடத்தில் மறு
ஜென்மம் எடுக்கிறோமே
தோற்றம் மாறலாம்
தொலைவில் போகலாம் ஞாபக
மேகம் கலையாதே முகங்கள்
மாறலாம் முகவரி மாறலாம்
நட்பின் கற்பு என்றும் மாறாதே
படித்த நாட்களிங்கு
பாத்திரமாக பிடித்த நாடகம்
நடக்கிறது வாழ்ந்த வாழ்க்கையை
திரும்பி தான் வாழ வரங்கள் நமக்கு
மட்டும் கிடைக்கிறது
அட தொப்புள் கொடியின்
உறவெல்லாம் வெறும் பத்தே
பத்து மாசம் நாம் தீயில் சேர்ந்து
வேகும் வரை இந்த கல்லூரி
நம்மோடு பேசும்
ஒன்றாய் சிரித்து
அழுத இடத்தில் மறு
ஜென்மம் எடுக்கிறோமே
வார்த்தை சங்கிலி
அறுந்து போகலாம் விழியின்
மொழிகள் மட்டும் மாறாதே
காற்று பேசி நாம் விதைத்த
வார்த்தைகள் விருட்சமாகி
நிற்கும் அழியாதே
வானம் தாண்டி எங்கும்
பறந்திடும் போதும் வேர்கள்
நமக்கு என்றும் இதுவல்லவா
கடலை பிரிந்த நீ கார்முகிலாகும்
மீண்டும் மழையாய் தொடுமல்லவா
நாம் கனவுகள் வளர்த்து
திரிந்தோமே பல இரவும் பகலும்
இங்கே இரு கைகள் குவித்து
கும்பிடுவோம் அட இதை விட
கோவில் எங்கே
ஒன்றாய் சிரித்து
அழுத இடத்தில் மறு
ஜென்மம் எடுக்கிறோமே
கண்கள் கலங்கிட
கண்கள் கலங்கிட கால
சக்கரம் திரும்பிடுதே கைகள்
கோர்த்திட கைகள் கோர்த்திட
கல்லும் மண்ணும் உயிர்
பெறுதே
மரத்திலிருந்து உதிர்ந்த
பூக்கள் மீண்டும் கிளைக்கு
சென்றிடுதே கடந்த காலத்தை
திருப்பி தந்து கடவுளை நட்பு
வென்றிடுதே
ஒன்றாய் சிரித்து
அழுத இடத்தில் மறு
ஜென்மம் எடுக்கிறோமே