Kanja Penne

Kanja Penne Song Lyrics In English


ஆஆ ஆஆ ஆஆ

கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி கெஞ்சி
கெஞ்சி தவித்தேனடி கொஞ்சி
கொஞ்சி உன்னை ரசித்தேனடி
சொல்லடி தருமமா காதலி

காதல் கண்ணா
காதல் கண்ணா இப்படி
அலைய கூடாதடா எப்படி
வித்தைகள் ஆகாதடா விட்டு
விட்டு நான் செல்வதும் தொட்டு
தொட்டு நீ சொல்வதும் தேவையா
இது என் காதலா

கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி



அழகிய திமிரே
ஓடாதே இனியும் புதிர்கள்
போடாதே

இனிக்கிற திருடா
அழைக்காதே இரவும் பகலும்
குழப்பாதே

நீ முதல் வார்த்தை
மறந்த பாடலா கடைசி பக்கம்
கிழிந்த நாவலா

நீ பாதியில் உறங்கிய
கதைகளா நீ பரிட்சையில்
மறந்திடும் விடைகளா

எடுப்பதற்குள் நின்ற
தொலைப்பேசியா நீ எப்போதும்
பயமுறுத்தும் விலைவாசியா

நினைவில் வர
அடம்பிடிக்கும் முகம் நீயா
கிடைக்காமல் அலைய
விடும் முகவரியா


இதுவரை மனப்பாடம்
ஆகாத திருக்குறள் நீயா

அடிக்கடி நான்
மறந்தே தேடிடும் ஒரு
பொருள் நீயா நீயா


கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி

சிக்கென நிலவே
ஒழியாதே சுடிதார் புதையலை
மறைக்காதே

கவிதை முரடா
குடையாதே கதவை
உடைத்து நுழையாதே

நீ சென்னையின்
கோடைக்காலமா நகரப்
பெண்கள் போடும் கோலமா

பண்டிகைப் பொழுதின்
துணிக்கடையா நீ காணும்
பொங்கலின் கடற்கரையா

ரசிப்பதற்குள் விலகும்
ரயில் காட்சியா நீ புரியாத
மொழிப்படத்தின் பகல்
காட்சியா

மாலையினில்
மலர்த்து விடும் நிழல்
நீயா வேலையில்லா
பொழுதுகளின் பகல்
நீயா


ஒருமுறை
வாழ்விலே வரும்
ஜனனம் நீயா

தினம் தினம்
தெரியாமல் சொல்லும்
ஜனகன மன நீயா

கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி