Kanja Penne |
---|
ஆஆ ஆஆ ஆஆ
கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி கெஞ்சி
கெஞ்சி தவித்தேனடி கொஞ்சி
கொஞ்சி உன்னை ரசித்தேனடி
சொல்லடி தருமமா காதலி
காதல் கண்ணா
காதல் கண்ணா இப்படி
அலைய கூடாதடா எப்படி
வித்தைகள் ஆகாதடா விட்டு
விட்டு நான் செல்வதும் தொட்டு
தொட்டு நீ சொல்வதும் தேவையா
இது என் காதலா
கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி
அழகிய திமிரே
ஓடாதே இனியும் புதிர்கள்
போடாதே
இனிக்கிற திருடா
அழைக்காதே இரவும் பகலும்
குழப்பாதே
நீ முதல் வார்த்தை
மறந்த பாடலா கடைசி பக்கம்
கிழிந்த நாவலா
நீ பாதியில் உறங்கிய
கதைகளா நீ பரிட்சையில்
மறந்திடும் விடைகளா
எடுப்பதற்குள் நின்ற
தொலைப்பேசியா நீ எப்போதும்
பயமுறுத்தும் விலைவாசியா
நினைவில் வர
அடம்பிடிக்கும் முகம் நீயா
கிடைக்காமல் அலைய
விடும் முகவரியா
இதுவரை மனப்பாடம்
ஆகாத திருக்குறள் நீயா
அடிக்கடி நான்
மறந்தே தேடிடும் ஒரு
பொருள் நீயா நீயா
கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி
சிக்கென நிலவே
ஒழியாதே சுடிதார் புதையலை
மறைக்காதே
கவிதை முரடா
குடையாதே கதவை
உடைத்து நுழையாதே
நீ சென்னையின்
கோடைக்காலமா நகரப்
பெண்கள் போடும் கோலமா
பண்டிகைப் பொழுதின்
துணிக்கடையா நீ காணும்
பொங்கலின் கடற்கரையா
ரசிப்பதற்குள் விலகும்
ரயில் காட்சியா நீ புரியாத
மொழிப்படத்தின் பகல்
காட்சியா
மாலையினில்
மலர்த்து விடும் நிழல்
நீயா வேலையில்லா
பொழுதுகளின் பகல்
நீயா
ஒருமுறை
வாழ்விலே வரும்
ஜனனம் நீயா
தினம் தினம்
தெரியாமல் சொல்லும்
ஜனகன மன நீயா
கஞ்சப்பெண்ணே
கஞ்சப் பெண்ணே இத்தனை
கஞ்சம் கூடாதடி கண்களின்
பிச்சை போதாதடி