Kannaa Vaa |
---|
இன்பங்கொண்டாட
புன்னகை சூட
காரணம் ஏதென்று கேளடி
மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள
மன்னவன் உதிக்கும் நாளடி
இன்பங்கொண்டாட
புன்னகை சூட
காரணம் ஏதென்று கேளடி
மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள
மன்னவன் உதிக்கும் நாளடி
உனது வருகை காணத்தான்
உனது வருகை காணத்தான்
காத்திருந்தேன் கண்ணா
உந்தன் குரலைக் கேட்கத்தான்
தவமிருந்தேன் கண்ணா
வரமாகப் பிறந்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா
உனது வருகை காணத்தான்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
உனை அள்ளி அணைக்கையிலே
எனைத் தள்ளிச் செல்லாதே
நாளும் என்னை அழச்செய்தே
அழகனே கொல்லாதே
ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு
திடுக்கென்று தோன்றுவாயே
மறைந்திருக்கும் கண்ணா
ஓடி வாடா
ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு
திடுக்கென்று தோன்றுவாயே
மறைந்திருக்கும் கண்ணா
ஓடி வாடா
வரமாகப் பிறந்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வாஆஅஆ
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்
மண் உண்ட வாயின் உள்ளே
உலகத்தைக் கண்டேனே
நீ என்னை பிரிகையிலே
இருளில் மூழ்கினேனே
நீ உடைக்கும் பானைகளில்
உன் குறும்பு மின்னுமடா
என் இதயப் பானை
ஏன் உடைத்தாய்
உயிராக கிடைத்தாய்
தாமோதரா
ஆனாலும் பயம் என்னில் ஏனடா
பாதையெங்கும் பூவிரித்தேன்
உந்தன் பாதம் நீ அதில் வைக்கக்
காத்திருக்கின்றேன்
கண்ணா வா
கண்ணா வா
கண்ணா வா
கண்ணா வா