Kannai Pole Mannai Kakkum |
---|
கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம்
அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம்
மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம்
அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம்
நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம்
நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம்
கலை மணக்கச் செய்வதனால் கலை மகளானோம்
கலை மணக்கச் செய்வதனால் கலை மகளானோம்
கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே
வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே
வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே
வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே
கனிந்த புலவர் கவிதை போலத் தெளிந்திருப்போமே
கனிந்த புலவர் கவிதை போலத் தெளிந்திருப்போமே
காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே
காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே
கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
வேகம் வந்தால் வெள்ளமாகப் பொங்கியோடுவோம்
வீம்பு வந்தால் ஊரயெல்லாம் மூழ்கச் செய்குவோம்
வேகம் வந்தால் வெள்ளமாகப் பொங்கியோடுவோம்
வீம்பு வந்தால் ஊரயெல்லாம் மூழ்கச் செய்குவோம்
மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம்
மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம்
முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம்
முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம்
கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
பொன்னியம்மா