Kanne Vaa Kanmaniye Vaa

Kanne Vaa Kanmaniye Vaa Song Lyrics In English


கண்ணே வா கண்மணியே வா
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்
குழந்தை ஏசுவே
சரணம் சரணம் திருவடி சரணம்

கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

காற்றாக ஊற்றாக வந்தானவன்
கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்
நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன்
செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன்

நினையாத முன்னே அழகான பொன்னே
வரவேண்டும் இங்கே என் தேவனே
ஒரு போதும் உன்னை மறவாது நாளும்
நான் பாட வேண்டும் உன் நாமமே

மன ஆலயம் உனதல்லவோ
மன ஆலயம் உனதல்லவோ
குழந்தை ஏசுவேஏ
சரணம் சரணம் திருவடி சரணம்

கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா


ஆகாய ராஜாங்கம் வாழ்கின்றவன்
அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்
மேய்ப்பானும் காப்பானும் தானானவன்
வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன்

ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம்
எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை
மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ

அருளன்னையின் ஒரு பிள்ளையே
அருளன்னையின் ஒரு பிள்ளையே
குழந்தை ஏசுவே
சரணம் சரணம் திருவடி சரணம்

கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்
குழந்தை ஏசுவே
சரணம் சரணம் திருவடி சரணம்

பொன்னோடை கீழ் வானில் பாய்கின்றது
பூபாளம் மென் காற்றில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்க்கின்றது
என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது