Kannil Unnai |
---|
கண்ண பிராணனின்
கண்ணிலிருக்க
கனவே கலையாதே
நந்தகுமாரன் நெஞ்சிலிருக்க
கனவே கலையாதே
கண்ணன் வரும் வரை
காத்திருப்பாள்
இந்த கண்மணி ராதை
கண்ணன் வருவான் காதினில்
சொல்வான் காதலின் கீதை
கண்ணில்
உன்னை கண்டுகொண்டேன்
கண்ணில்
உன்னை கண்டுகொண்டேன்
கண்ணபெருமானே
கண்களுக்கு
நன்றி சொன்னேன்
கன்னி இளமானே
கங்கைக்கரை காற்றை கேளு
கண்ணபெருமானே
காதல் செய்த காலம் எல்லாம்
காதில் கூறும் தானே
கண்ணில்
உன்னை கண்டுகொண்டேன்
கண்ணபெருமானே
சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ
இளமனம் எனும் மலர்வனம்
துளிர் விட தினம் தினம்
அவன் இங்கு வருவானா
இனியும் ஒரு அறிமுகமா
இருவருமே புது முகமா
அவன் இங்கு வருவானா
தோழி அடைக்கலம் தருவானா
ஈச்சம் பூவை ஈரக்காற்று
கூச்சம் தீர கூடிடும் இரவினில்
அவன் இங்கு வருவானா
கண்ணா மழை வண்ணா
கண்ணா மழை வண்ணா
என செம்மாங்குயில் போல்
கூவுகின்றேன்
கண்ணில் உன்னை
கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே
கண்களுக்கு
நன்றி சொன்னேன் கன்னி இளமானே
கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே
தொட்டகுறை முன்பு விட்டகுறை
இன்று தொடங்கிட தொடங்கிட
தொடர்ந்திட தொடர்ந்திட
புது சுகம் அரும்பாதோ
புயல் அடித்தா நிலவனையும்
மழை அடித்தா மலை கரையும்
உனக்கிது தெரியாதா கண்ணா
உறவுகள் திரும்பாதா
கண்ணா உறவுகள் திரும்பாதா
மண்ணில் காதல்
மாய்ந்ததென்று பார்த்ததில்லை
பூமியில் அதற்கொரு
கல்லறை கிடையாது
உன்னை இங்கு என்னை
உன்னை இங்கு என்னை
என்றும் ஒன்றாய்
சேர்த்த காதல் வாழ்க
கண்ணில் உன்னை
கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே
கண்களுக்கு
நன்றி சொன்னேன் கன்னி இளமானே
கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே
பிறவி உனக்காக
எடுத்த கிளி
மனதை உனக்காக
கொடுத்த கிளி
இனியும் தனியாக தவித்தபடி
இருக்க விடலாமோ
தலைவன் மடி
கண்ணில்
உன்னை கண்டு கொண்டேன்
கண்ணபெருமானே
கண்களுக்கு நன்றி சொன்னேன்
கன்னி இளமானே