Karpanaiyo Kai Vanthatho |
|---|
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம் சுகமோ சுகம்
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம் சுகமோ சுகம்
அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்
அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்
உந்தன் கையில் விழுந்தேனோ
கன்னிக் கனியே
இல்லைக் கள்ளில் விழுந்தேனோ
செல்லக் கிளியே
யாரும் சொல்லித் திரியாத
இன்பக் கலையே
அதை அள்ளிக் கொள்ள வந்தேன்
தன்னந்தனியே
பார்த்தது
போதுமா
கேட்டது
வேண்டுமா
இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்
என்னை கட்டி வைத்த விலங்கோ
கண்கள் இரண்டும்
அங்கு வெட்டி வைத்த கரும்போ
கன்னம் இரண்டும்
உன்னைக் கண்டு கண்டு
ரசித்தே என்னை கொடுத்தேன்
அங்கு காதல் எனும் அமுதை
அள்ளிக் குடித்தேன்
பார்த்தது
போதுமா
கேட்டது
வேண்டுமா
இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம் சுகமோ சுகம்
