Kattazhagu Kanni |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆஆஆஆஅ
கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே ஆகட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே
பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம் ஜோடி ஆவேனே பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம் ஜோடி ஆவேனே
கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே
ஆஆஆஆஅ இன்ப துறைமுகம் நானென எண்ணி ஏங்கி வந்தோரே முத்துமணி வைரமாலைகள் தந்தால் மோகம் தீர்ப்பேனே
தங்கக்குடம் பொங்கும் மெல்லிடை தன்னை தாங்கக்கூடாதோ தங்கக்குடம் பொங்கும் மெல்லிடை தன்னை தாங்கக்கூடாதோ
பொன்னை வைக்கும் தட்டில் என்னையும் வைத்து பார்க்ககூடாதோ பொன்னை வைக்கும் தட்டில் என்னையும் வைத்து பார்க்ககூடாதோ
மங்கை நான் அல்லித்தண்டு மன்னனுக்கு முல்லை செண்டு மங்கை நான் அல்லித்தண்டு மன்னனுக்கு முல்லை செண்டு அத்தை மகன் போல வந்தால் மெத்தையென நானும் உண்டு
கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே
பெட்டி பணம் கொண்டு வந்தவர்க்கெல்லாம் ஜோடி ஆவேனே
ஆஆஆஆஅ செங்கதிரும் அங்கே சாய்ந்த பின்னாலே எங்கள் ராஜாங்கம் செங்கதிரும் அங்கே சாய்ந்த பின்னாலே எங்கள் ராஜாங்கம்
உங்கள் ஜாதி மதம் தன்னை கேட்பதுமில்லை எங்கள் அரசாங்கம்
இன்ப இரவின்று போய்விடும் மீண்டும் நாளை வாராதே இன்ப இரவின்று போய்விடும் மீண்டும் நாளை வாராதே
இங்கு வந்த பின்னும் தேவையை சொல்ல நாணம் கொள்ளாதே இங்கு வந்த பின்னும் தேவையை சொல்ல நாணம் கொள்ளாதே
சந்தனம் பூசிக் கொள்வோம் சங்கதிகள் பேசிக் கொள்வோம் சந்தனம் பூசிக் கொள்வோம் சங்கதிகள் பேசிக் கொள்வோம் கைகளை பின்னிக் கொள்வோம் கண் சிவக்க கதை படிப்போம்
கட்டழகு கன்னி காத்திருக்கேனே ரோஜா பூப்போலே