Kaviya Mullai Pol |
---|
பாடகர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர் : வைரமுத்து
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை ஆஆஆஆஆஆஆஆஅ
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே பிள்ளை நிலா எங்கே போனாளோ வண்டு விழும் மாலை ஆனாளோ
பிஞ்சு நடைப்போட்டு பிள்ளை குலம் போகும் உள்ளிருக்கும் சோகம் கண்ணில் எட்டி பார்க்கும் நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை நெஞ்சில் பிள்ளை கையில் இல்லை
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே தவறியது எங்கே
இது என்ன மேடை மரணத்தின் வாடை இவன் தேகம் நாளை கிழிகின்ற ஓலை சோக மேகம் வானில் போகும் பாதையாவும் பாலையாகும்
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே தவறியது எங்கே
இமைகளின் ஈரம் சுடுகின்ற பாரம் இனி எந்த நாளும் இலையுதிர் காலம் சாவின் ஓசை கேட்கும் போது மீண்டும் பிள்ளை காண்பதேது
காவிய முல்லை போல் ஒரு பிள்ளை தவழ்ந்தது இங்கே தவறியது எங்கே பிள்ளை நிலா எங்கே போனாளோ வண்டு விழும் மாலை ஆனாளோ