Koondu Kulla Enna Vechu |
---|
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
கண்ணு வளத்து
கண்ணு தானா துடிச்சுதுனா
ஏதோ நடக்குமின்னு பேச்சு
மானம் குறையுமின்னு
மாசு படியுமின்னு வீணா கதை
முடிஞ்சு போச்சு
ஈசான மூலையில
லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி
பேசுது
ஆறாத சோகம்
தன்னை தீராம சேத்து
வச்சு ஊரும் சேந்து
என்னை ஏசுது
மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே
தென்னன்கிளையும்
தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம்
பாடும்
காஞ்சி மடிப்பும்
கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை
தினம் பேசும்
பொள்ளாச்சி சந்தையில
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு
போகல
பன்னாரி கோயிலுக்கு
முந்தானை ஓரத்தில
நேர்ந்து முடிச்ச கடன் தீரல
மானே மானே
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
என் மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே