Kozhi Koovum Neram Aachu

Kozhi Koovum Neram Aachu Song Lyrics In English


மற்றும் சீர்காழி சிவசிதம்பரம்

வந்தேன் வந்தேன் வந்தேன்
கதையின் சூத்திரதாரி
தந்தேன் தந்தேன் தந்தேன்
வணக்கம் சபையினை நாடி
காதல் தேவதை போலே
இங்கொரு பெண் சிலை ஒன்று
கண்ணில் இத்தனை சோகம் வந்தது
ஏன் அதில் இன்று
அழகான மணவாளன் காதலின் வசமானாள்
உயிரோடு உயிர் சேர்ந்து அன்றிலைப் போலானாள்
இரவெல்லாம் முதலிரவாக
அவர் வாழும் ஒரு நாள் காலையில்
துயில் மேவும் அவள் மணவாளன்
தனை மங்கை எழுப்புகின்றாள்

கோழி கூவும் நேரம் ஆச்சு
தள்ளிப் போ மாமா
கூத்து பாத்த சேதியெல்லாம்
சொல்லிப் போ மாமா
விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு
எந்திரி மாமா விழி ரெண்டும்
உறங்காம சொருகுது சொருகுது

கோழி கூவும் நேரம் ஆச்சு
தள்ளிப் போ மாமா
கூத்து பாத்த சேதியெல்லாம்
சொல்லிப் போ மாமா





ஒரு நாழி இன்னும் கொஞ்சம் மயிலே மயிலே
உந்தன் இடையோடு விளையாட ஒத்துக்கொள்ளம்மா

கோழி கூவும் நேரம் ஆச்சு
தள்ளிப் போ மாமா
ஹான் ஹான்
ஓடம் அங்கே காத்திருக்கு
ஓடிப் போ மாமா

தண்ணீரில் தள்ளாடும் ஓடம் போலே
அம்மாடி என் நெஞ்சம் தள்ளாடுதே
நெத்திலி மீனே மைவிழி மானே
நெஞ்சிலே சாச்சுக்கோ

அட கோழி கூவும் நேரம் ஆச்சு
தள்ளிப் போ மாமா
ஹான் ஹான்
ஓடம் அங்கே காத்திருக்கு
ஓடிப் போ மாமா






எப்போதும் மீனுண்டு கடலிலதான் காதலியே
கடல் எங்கே போய் விடும் சொல்லு

ஐயோ
கோழி கூவும் நேரம் ஆச்சு
தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு
ஓடிப் போ மாமா

ஹேய்
ஓடத்தை ஒட்டியே களைப்பாகி போனேன்
ராசாத்தி முழு நாளும் ரசமாக இருக்கோணும்

கோழி கூவும் நேரம் ஆச்சு
தள்ளிப் போ மாமா
ஓடம் அங்கே காத்திருக்கு ஓடிப் போ மாமா
விளையாடி விளையாடி பொழுதாகிப் போச்சு
விரல் தீண்டும் இடமெல்லாம் அடையாளமாச்சு
எந்திரி மாமா விழி ரெண்டும்
உறங்காம சொருகுது சொருகுது
கோழி கூவும் நேரம் ஆச்சு
தள்ளிப் போ மாமா
ஹையோ
ஓடம் அங்கே காத்திருக்கு
ஓடிப் போ மாமா

காதலி சொன்னது வேதம் என்று
புயல் வரும் வேளையில் அவன் போனான்
இந்திய எல்லையை தாண்டும் போது
பாவிகள் சுட்டதில் பலியானான்



காதலன் மாண்டான் மீனவர் சொன்னார்
எனினும் அவள் மனம் நம்பாது
ஒரு தினம் வருவான் தலைமகன் என்றே
தனிமையில் ஆடி சிலையானாள்