Kuyile Ilaman

Kuyile Ilaman Song Lyrics In English


குயிலே இள மாங்குயிலே

உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு

கேட்டு அதைத்தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு

குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத்தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு

மயிலே மலை வாழ் மயிலே
வண்ணச் சிறகை விரித்து
அழகு நடனம் ஆடு
பார்த்து அதைத்தான் பார்த்து
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்
தாயின் மனது

பிறவாத தமிழ் கொண்டு
இசை பாடினால்
திறவாத கதவேதும்
கிடையாதம்மா
தொலை தூரம் இருக்கின்ற
தொடுவான் வரை
தமிழ்ப் பாடல் போய்ச் சேர
தடை ஏதம்மா

ஒரு நாள் வரும் திருநாள் வரும்
நான் யார் என்று தாய் கண்டு
மகனே எனலாம்
விழி ஈரமும் மன பாரமும்
இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம்

குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத் தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
குயிலே இள மாங்குயிலே


ஆஅஆஅஆஹாஆஆஅஆ
ஆஅஆஅஆஹஹா ஆஆஆஹாஆஅஆ

தினம் தோறும் அம்மாவை
சீராட்டுவேன்
தலை வாரி அழகாகப்
பூச் சூட்டுவேன்
பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன்
தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்

முன்னூறு நாள்
மடி தாங்கினாள்
அந்தத் தாய் தானே
நான் போற்றும் கடவுள் வடிவம்
பல கோயிலோ பல தெய்வமோ
இங்கு வேறேது நான் காண
உலகம் முழுதும்

குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத் தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு

மயிலே மலை வாழ் மயிலே
வண்ணச் சிறகை விரித்து
அழகு நடனம் ஆடு
பார்த்து அதைத்தான் பார்த்து
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்
தாயின் மனது

குயிலே இள மாங்குயிலே