Kuyile Ilaman |
---|
குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத்தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத்தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
மயிலே மலை வாழ் மயிலே
வண்ணச் சிறகை விரித்து
அழகு நடனம் ஆடு
பார்த்து அதைத்தான் பார்த்து
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்
தாயின் மனது
பிறவாத தமிழ் கொண்டு
இசை பாடினால்
திறவாத கதவேதும்
கிடையாதம்மா
தொலை தூரம் இருக்கின்ற
தொடுவான் வரை
தமிழ்ப் பாடல் போய்ச் சேர
தடை ஏதம்மா
ஒரு நாள் வரும் திருநாள் வரும்
நான் யார் என்று தாய் கண்டு
மகனே எனலாம்
விழி ஈரமும் மன பாரமும்
இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம்
குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத் தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
குயிலே இள மாங்குயிலே
ஆஅஆஅஆஹாஆஆஅஆ
ஆஅஆஅஆஹஹா ஆஆஆஹாஆஅஆ
தினம் தோறும் அம்மாவை
சீராட்டுவேன்
தலை வாரி அழகாகப்
பூச் சூட்டுவேன்
பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன்
தாய் போல நான் மாறி தாலாட்டுவேன்
முன்னூறு நாள்
மடி தாங்கினாள்
அந்தத் தாய் தானே
நான் போற்றும் கடவுள் வடிவம்
பல கோயிலோ பல தெய்வமோ
இங்கு வேறேது நான் காண
உலகம் முழுதும்
குயிலே இள மாங்குயிலே
உந்தன் கூட்டில் இருந்து
வெளியில் வந்து பாடு
கேட்டு அதைத் தான் கேட்டு
மெல்லத் திரும்பும்
எனது தாயின் பழைய நினைவு
மயிலே மலை வாழ் மயிலே
வண்ணச் சிறகை விரித்து
அழகு நடனம் ஆடு
பார்த்து அதைத்தான் பார்த்து
மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும்
தாயின் மனது
குயிலே இள மாங்குயிலே