Maalaigal Idam |
---|
ஆஆஆஅஆஆஅ
ஆஅஆஅஆஆஅ
ஆஅஆஅஆஆஅ
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்மங்களம்மங்களம்
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே
நெஞ்சிலே தாலாட்டும்
நெடுநாள் ஆசை
இன்றுதான் கோவிலில்
முதல் நாள் பூஜை
நெஞ்சிலே தாலாட்டும்
நெடுநாள் ஆசை
இன்றுதான் கோவிலில்
முதல் நாள் பூஜை
தொட்டு விட்டுப் போகாமல்
தொடரும் காதல்
பட்டு விழி மூடாமல்
தோளோடு மோத
தாகங்கள் வரும் மோகங்கள்
இனி தத்தளிக்கும்
ம்ம்ம்தேகங்கள் கருந்தேகங்கள்
வெள்ளி முத்தெடுக்கும்
ம்ம்ம் தந்த சுகம்
கண்ட மனம் சந்தம் படித்திடும்
சொந்தம் இனித்திடும்
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே
கண்களும் தூங்காமல்
கனவில் வாழும்
கைகளில் கங்கையும்
கலக்கும் நாளும்
கண்களும் தூங்காமல்
கனவில் வாழும்
கைகளில் கங்கையும்
கலக்கும் நாளும்
கட்டிலறை நாள்தோறும்
கவிதைகள் பாடும்
விட்டு விடக் கூடாமல்
விடி காலை கூடும்
ஆரங்கள் பரிவாரங்கள்
பல அற்புதங்கள்
ம்ம்ம் எண்ணங்கள் பல
வண்ணங்கள் எழில் சித்திரங்கள்
ம்ம்ம் இன்று முதல்
இன்னிசைகள் இங்கு பிறந்திடும்
எங்கும் பறந்திடும்
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்மங்களம்மங்களம்
மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே