Maalaiyittaan

Maalaiyittaan Song Lyrics In English


மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்

மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்

மாதுளம் பழம் போல கன்னம்
கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்
மாதுளம் பழம் போல கன்னம்
கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்
இன்பத் தேன் மலர் தூவிய மஞ்சம்
சுகம் தேடும் பாவை நெஞ்சம்

மாணிக்கத் தாரகை நிலவினிலே
எங்கும் மங்கலம் இசைத்திடும் தென்றலிலே
மாணிக்கத் தாரகை நிலவினிலே
எங்கும் மங்கலம் இசைத்திடும் தென்றலிலே
தேரினில் தேவன் ஊர்வலமே
அந்த தேவியின் வாழ்வினி காவியமே

மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்


ஆயிரம் கம்பனின் பாடல்
அதில் ஆனந்தத் தோகையின் ஆடல்
ஆயிரம் கம்பனின் பாடல்
அதில் ஆனந்தத் தோகையின் ஆடல்
அந்தப் பாடலில் பிறந்தது ராகம்
அவள் ஆடலில் வளர்ந்தது மோகம்
அந்தப் பாடலில் பிறந்தது ராகம்
அவள் ஆடலில் வளர்ந்தது மோகம்

ஊஞ்சலில் உள்ளங்கள் உறவாட
வரும் ஊடலில் லீலைகள் சதிராடும்
ஊஞ்சலில் உள்ளங்கள் உறவாட
வரும் ஊடலில் லீலைகள் சதிராடும்
காதல் தருவது துன்பம்
இனி காலம் யாவும் வசந்தம்

மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்

கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்