Maalaiyittaan |
---|
மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்
மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்
மாதுளம் பழம் போல கன்னம்
கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்
மாதுளம் பழம் போல கன்னம்
கலை மன்மதன் வழங்கிடும் சின்னம்
இன்பத் தேன் மலர் தூவிய மஞ்சம்
சுகம் தேடும் பாவை நெஞ்சம்
மாணிக்கத் தாரகை நிலவினிலே
எங்கும் மங்கலம் இசைத்திடும் தென்றலிலே
மாணிக்கத் தாரகை நிலவினிலே
எங்கும் மங்கலம் இசைத்திடும் தென்றலிலே
தேரினில் தேவன் ஊர்வலமே
அந்த தேவியின் வாழ்வினி காவியமே
மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்
ஆயிரம் கம்பனின் பாடல்
அதில் ஆனந்தத் தோகையின் ஆடல்
ஆயிரம் கம்பனின் பாடல்
அதில் ஆனந்தத் தோகையின் ஆடல்
அந்தப் பாடலில் பிறந்தது ராகம்
அவள் ஆடலில் வளர்ந்தது மோகம்
அந்தப் பாடலில் பிறந்தது ராகம்
அவள் ஆடலில் வளர்ந்தது மோகம்
ஊஞ்சலில் உள்ளங்கள் உறவாட
வரும் ஊடலில் லீலைகள் சதிராடும்
ஊஞ்சலில் உள்ளங்கள் உறவாட
வரும் ஊடலில் லீலைகள் சதிராடும்
காதல் தருவது துன்பம்
இனி காலம் யாவும் வசந்தம்
மாலையிட்டான் ஒரு மன்னன்
அங்கு மயங்கி நின்றாள் ஒரு அன்னம்
கெட்டி மேளங்கள் முழங்குது வானம்
மழை மேகங்கள் பொழியுது கீதம்