Maanicka Thottil

Maanicka Thottil Song Lyrics In English


ஆரிராரி ஆராரிராரோ
ஆரிரிராரோ ஆராரிராரோ
ஆரி ராரி ரா ரோ ஆரிராரி
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ

மாணிக்க தொட்டில்
இங்கிருக்க மன்னவன் மட்டும்
அங்கிருக்க காணிக்கையாக
யார் கொடுத்தாள் அவள்
தாயென்று ஏன் தான் பேர்
எடுத்தாள்

மாணிக்க தொட்டில்
இங்கிருக்க மன்னவன் மட்டும்
அங்கிருக்க காணிக்கையாக
ஏன் கொடுத்தேன் அதை
கடமையென்றே நான்
கொடுத்தேன்

ஆரிராரி ஆராரிராரோ
ஆரிரிராரோ ஆராரிராரோ
ஆரி ராரி ரா ரோ ஆரிராரி
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ

கொடியில் பிறந்த
மலரை கொடி புயலின்
கைகளில் தருமோ
கொடியில் பிறந்த மலரை
கொடி புயலின் கைகளில்
தருமோ மடியில் தவழ்ந்த
மகனை தாய் மறக்கும்
காலம் வருமோ

புகுந்த வீட்டை
நினைத்தாள் மனை
விளங்க நினைத்த
பேதை புகுந்த வீட்டை
நினைத்தாள் மனை
விளங்க நினைத்த பேதை
பிறந்த மகனை கொடுத்தாள்
அவள் வகுத்த புதிய பாதை
அவள் வகுத்த புதிய பாதை


மாணிக்க தொட்டில்
இங்கிருக்க மன்னவன் மட்டும்
அங்கிருக்க
காணிக்கையாக
யார் கொடுத்தாள் அவள்
தாயென்று ஏன் தான் பேர்
எடுத்தாள்

ஆரிராரி ஆராரிராரோ
ஆரிரிராரோ ஆராரிராரோ
ஆரி ராரி ரா ரோ ஆரிராரி
ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ

இமையில் வளர்ந்த
விழியை இமை எரியும்
நெருப்பில் விடுமோ
இமையில் வளர்ந்த
விழியை இமை எரியும்
நெருப்பில் விடுமோ
இடையில் சுமந்த மகனை
மனம் இழக்க சம்மத
படுமோ

இன்று நாளை
மாறும் நம் இதயம்
ஒன்று சேரும் இன்று
நாளை மாறும் நம் இதயம்
ஒன்று சேரும் சென்ற மகனும்
வருவான் முத்தம் சிந்தை
குளிரத் தருவான் முத்தம்
சிந்தை குளிரத் தருவான்

மாணிக்க தொட்டில்
இங்கிருக்க மன்னவன் மட்டும்
அங்கிருக்க
காணிக்கையாக
ஏன் கொடுத்தேன் அதை
கடமையென்றே நான்
கொடுத்தேன்