Mamiyaalukku Oru Saedhi |
---|
எலையப் போட்டான் சோத்த வச்சான்
எடுத்து தின்பத கெடுத்துட்டான்
சிலையப் போல ரதியக் கொடுத்தான்
சிரிச்சி பேச தடுத்திட்டான்
தலையில் வைத்த மல்லிகைப் பூ
தானும் வாடி போகுது
வாசப்படிய பாத்து பாத்து
வயசும் ஓடி போகுது
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
மருமகள் தன்னை
பெருமைகளுடனே
மருமகள் தன்னை பெருமைகளுடனே
வாழ வைப்பது புது நீதி
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
அடி மருமகளெல்லாம் எருமைகளாக
அந்த மாமியாருக்கு அடிமைகளாக
அடி மருமகளெல்லாம் எருமைகளாக
அந்த மாமியாருக்கு அடிமைகளாக
அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்
அத வயசானவங்க புரிஞ்சுக்கணும்
நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்
பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்
பழசா போன பாத்திரமெல்லாம்
பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
கிட்டத்தில் நின்னா சிரிச்சாள் என்று
கேள்வி கேட்க கூடாது
ஆமாமா
கிட்டத்தில் நின்னா சிரிச்சாள் என்று
கேள்வி கேட்க கூடாது
தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது
ஆமாமா
தட்டி மறைவில் காதை கொடுத்து
ஒட்டு கேட்க கூடாது
ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது
ஊதுவத்திய பொருத்தும் போது
உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது
பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது
பஞ்சண மெத்தைய விரிக்கும் போது
பக்குன்னு இரும கூடாது
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்
ராம் ராம் ராம ராம ராம் ராமா
சாவியை மருமகள் கையில் கொடுத்து
ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்
சாமி பாக்கணும் கோவில் போகணும்
நம்ம சந்தோஷத்துக்கு
டைம் கொடுக்கணும் கொடுக்கணும்
மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி
மம்மம்ம மாமியாளுக்கு ஒரு சேதி
இதை மதிச்சு நடந்தா மரியாதி