Manam Padida Ninaikiradhae

Manam Padida Ninaikiradhae Song Lyrics In English


மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன் புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன்

மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

தேசங்கள் எல்லாம் பேதங்கள் பேசும் வானங்கள் கூட தூரங்கள் ஆகும் நாளை நம் தோள்கள் பாரங்கள் ஆகும் நாம் கொண்ட நேசம் நாடெங்கும் வாழும் ஆனந்தமே ஆரம்பமே இருவர் : சோகங்கள் ஏனோஹோஹொஹ்

மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

விடிகின்ற காலை விளக்கங்கள் கூறும் வருங்காலம் நம்மை வரவேற்று பாடும் கரைகின்ற மேகம் பொழிகின்ற நேரம் கனவுகள் எல்லாம் நனவென்று ஆகும் வேதங்களை நாம் செய்கிறோம் வாதங்கள் ஏனோ

மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே


அனைவரும் :

ஒரு வானில் கூடும் பறவைகள் ஆனோம் உறவென்ற சோலைக்கு மலர் கொண்டு போனோம் எங்கெங்கு வாழ்ந்தோம் வந்திங்கு சேர்ந்தோம் துன்பங்கள் என்றால் என்னென்று கேட்போம் அனைவரும் : இன்றல்லவோ விடை கொள்கிறோம் எங்கெங்கு சேர்வோம்

மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன் புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன்

மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே