Manasellam – Dhilip Varman |
---|
மனசெல்லாம் தினம் வலி கூடுதே
இரவெல்லாம் உன்னை விழி தேடுதே
கண்ணீரில் என் மனம் மூழ்குதே
கனவெல்லாம் உன் முகம் காட்டுதே
கண் காணாத தீவில்
எனை தொலைத்தேனடி
தீரா காதலை
தீயில் எரித்தாயடி
மரணம் தீண்டும் வரையில்
எனை பிரியாமலே
மறு ஜென்மம் வரை என்னோடு
வர வேண்டுமே
ஏனோ என்னில் நீயே வந்து உயிராகினாய்
கனவா நிஜமா நீயே என்னை உருமாற்றினாய்
கண்ணம்மா உன் பேரை சொல்லி
கண்ணிரெண்டும் தேடுதே
கொஞ்சமாச்சும் பேசும்போதும்
நித்தம் ஏக்கம் கூடுதே
உன் பாதம் என் பாதை சேரும்
நேரம் என்று தொடருமோ
மனசோடு உன் காதல் பேச
காயங்களும் மாறுமோ
கண்ணுக்குள்ள உன்னை பொத்தி வச்சேன்
கத்தி வச்சி என்னை மெல்ல தைச்சு வச்ச
புன்னகையில் என்னை சிக்க வச்சு
பொட்டை புள்ள என்ன தள்ளி வச்ச
ஓ கண்ணாமூச்சி
ஆடும் காதல் ஏனடி
என்னை முத்தம் வெச்சி
கட்டி கொண்டு நீயும் வாழடி
நீளும் இந்த வானம்
அது போல காதல் நீளுமே
பேசும் மொழி யாவும்
என் நெஞ்சில் வாழுமே
வாரம் முழு நாளும்
நீதானே எந்தன் எண்ணமே
நேரம் இந்த காலம்
அது ஆகும் வண்ணமே
நீதானே என் வாழ்விலே
யாவும் ஆனாய்
ஏனோ என் உல் மூச்சிலே
காயம் செய்தாய்
சாய்ந்து மடி மேலே
தலை கோதும் விரல் எங்கே
நேற்று மழை வானில்
நாடை போட்ட வழி எங்கே
என் காதலே மாயம் செய்யாதே