Manasellam Unnidam |
---|
மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
என்னுயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே
நேரில் வாடா
வான் என்று உன்னையும் நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறலாய் வந்து என் வாழ்வில்
இரு வரியில் முடிந்தாயே
{கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்} (2)
மனசெல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
என்னுயிர் தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே
நேரில் வாடா
Show me the meaning
Of being lonely
Tell me why
I cant be there
Where you are
There is something missing in my heart
கரை மோதும் அலைகளை போல
நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள்
கதைகள் சொல்லிடுதே
தண்ணீரில் குமிழியை போல
வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள்
மயானம் ஆகியதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையே
என் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும்நான் அழுவதும்
உன்னை நினைத்தே தோழா
கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
எனக்கு இருந்த ஒரே பிரண்ட் இப்ப இல்ல
ஸ்கூல்லுக்கு போகவும் புடிக்கல
இனிமே எனக்கு யாரு இருக்கா (வசனம்)
{கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்} (2)
கண் மூடினால்
நான் பேசினால்
கண் மூடினால்
நான் பேசினால்
மனசெல்லாம் உன்னையே நினைத்து
மனசெல்லாம் உன்னையே நினைத்து