Mane Nane

Mane Nane Song Lyrics In English


மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே
மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாபம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாபம்

நீராடு இளமையிலே
சேவல் கூவும் வரையினிலே

மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

ஆடை நனைந்திருக்க
ஆசை தீயை மூட்டாதா
ஆத்தாடி காளை கன்று
வாலை மெல்ல ஆட்டாதா

தேகம் தழுவி
ஒரு யாகம் செய்ய கூடாதா
காதோட கன்னிப்பூவும்
காதல் கீதம் ஆகாதா

மின்சார மின்னல் ஒன்று
மெல்ல மெல்ல பாய

மீட்டாத வீணை உந்தன்
மார்பின் மீது சாய

புது ராகம் நரம்புகளில்
உருவாகும் நொடிப்பொழுதில்

மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

பாதக் கொலுசு கொஞ்சும் பாதம்
என்ன பூச்செண்டா
நான் தீண்டும் அங்கம் எல்லாம்
தித்திக்கின்ற கற்கண்டா


பூவில் குடியிருக்க
நீயும் என்ன பொன் வண்டா
நான் தானே உன்னை என்னை
சிந்திக்காத நாளுண்டா

ஆகாயம் பொத்துக் கொண்டு
தண்ணீர் விடும் போது

ஆகாய கங்கை செல்லும்
கோட்டம் இங்கு ஏது

ஒரு பாதி குளிர்ந்ததென்ன
மறு பாதி கொதிப்பதென்ன

மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே

ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாபம்
ஊர் தூங்கும் ராத்திரி நேரம்
இளமனதில் எத்தனை தாபம்

நீராடு இளமையிலே
சேவல் கூவும் வரையினிலே

மானே நானே சரணம் சரணம்
மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம்
மழை வந்தாலே