Mangala Vaanam |
---|
மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத நேரமிது
சூரியன் மீது சந்தனம் அள்ளி
யாரது பூசியது
மாளிகை தேவதை வாடியதோ
தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ
என்னை எண்ணி
மாளிகை தேவதை வாடியதோ
தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ
மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத நேரமிது
பாவையிவள் பாதம் பட்டால்
பாதைக்கும் மோகம் வரும்
ராஜன் மகன் தொட்டு விட்டால்
ஆடைக்கும் ஆசை வரும்
பாவையிவள் பாதம் பட்டால்
பாதைக்கும் மோகம் வரும்
ராஜன் மகன் தொட்டு விட்டால்
ஆடைக்கும் ஆசை வரும்
உனை மூடும் அந்த ஆடை
பல சேதி அறியும்
நீ கேட்டால் உனக்காக
அது சீதனம் ஆகிவிடும்
மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத நேரமிது
பூ விரிந்த சாலையெங்கும்
மேகங்கள் ஊர்வலங்கள்
கூந்தலினை கோதிவிடும்
ஆயிரம் பூமரங்கள்
பூ விரிந்த சாலையெங்கும்
மேகங்கள் ஊர்வலங்கள்
கூந்தலினை கோதிவிடும்
ஆயிரம் பூமரங்கள்
புவி யாவும் மலர் தூவும்
அதில் மேனி வலிக்கும்
அந்திமாலை இந்த மாலை
எந்தன் மார்பில் ஓய்வெடுக்கும்
மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத லீலை இது
சூரியன் மீது சந்தனம் அள்ளி
யாரது பூசியது
மாளிகை தேவதை வாடியதோ
தென்றல் தேடி
மாலையில் தாமரை ஏங்கியதோ
என்னை எண்ணி
மாளிகை தேவதை வாடியதோ
தென்றல் தேடி
மாலையில் தாமரை ஏங்கியதோ
லல லால லாலாலல லல லால லாலாலலா