Mangamma Kannil |
---|
மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா
அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா
வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்
மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா
சலங்கை குலுங்கும் இது தனி உலகோ
உரிமை தனிமை இது உனக்கழகோ
நீஅறிவாய் மாதே
சலங்கை குலுங்கும் இது தனி உலகோ
உரிமை தனிமை இது உனக்கழகோ
நீஅறிவாய் மாதே
உறவில் தொடரும் நினைவின்
மழையில் நனைந்திட வா
கனவே நினைவாய் மாறிட வா
நினைவாய் மாறிட வா
மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா
உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ
பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ
வாவிரைவாய் நீயே
உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ
பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ
வாவிரைவாய் நீயே
கொடியும் கிளையும்
இனியும் இணையும்
உந்தன் மீதே வா
கனியே ரசமே பாடிட வா
ரசமே பாடிட வா
மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா
அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா
வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்
மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா