Mangamma Kannil

Mangamma Kannil Song Lyrics In English


மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா
அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா
வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்

மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா

சலங்கை குலுங்கும் இது தனி உலகோ
உரிமை தனிமை இது உனக்கழகோ
நீஅறிவாய் மாதே
சலங்கை குலுங்கும் இது தனி உலகோ
உரிமை தனிமை இது உனக்கழகோ
நீஅறிவாய் மாதே

உறவில் தொடரும் நினைவின்
மழையில் நனைந்திட வா
கனவே நினைவாய் மாறிட வா
நினைவாய் மாறிட வா

மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா


உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ
பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ
வாவிரைவாய் நீயே
உடையும் நடையும் ஒரு தனிக் கலையோ
பருவம் நழுவும் கதை அறிந்தில்லையோ
வாவிரைவாய் நீயே

கொடியும் கிளையும்
இனியும் இணையும்
உந்தன் மீதே வா
கனியே ரசமே பாடிட வா
ரசமே பாடிட வா

மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா
அள்ளவா மெல்லவா உந்தன் ஆசை சொல்லவா
வண்ணச் சிட்டே பாதை மாறி வா ஆடலாம்

மங்கம்மா கண்ணில்
மின்னலே துள்ளுதோ சொல்லம்மா
என்னம்மா நெஞ்சம் கெஞ்சியே பொங்குமே
அம்மம்மா